×

முதல்வர் பழனிசாமி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறால் பரபரப்பு; சென்னைக்கே திரும்பிய விமானம்

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னைக்கே திரும்பினார். இதனையடுத்து மற்றொரு விமானம் சென்னையில் இருந்து மதுரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்று பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார்.

மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் புறப்பட்டார். எதிர்பாராத விதமாக முதல்வர் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்கு வந்தது. இதனயைடுத்து மாற்று விமானம் மூலம் மதுரைக்கு முதலமைச்சர் எடப்பாடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,Chennai , Chennai, Thoothukudi, Aircraft, Mechanical Disaster, Chief Minister Edappadi Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...