சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,822 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்குளம், காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் வானூர், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, மதுரை மாவட்டம் சக்கிமங்கலம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சாக்கோட்டை, தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி மற்றும் மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, சேலம் மாவட்டம் சங்ககிரி கிழக்கு ஆகிய 13 இடங்களில் குறுவட்ட அளவர்களுக்கான குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1,822 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி