×

கிருஷ்ணகிரி நகை வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது

சென்னை: கிருஷ்ணகிரி நகை வியாபாரியிடம், துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). நகை வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார், முகமது ரியாஸ். நகை வியாபாரி மணிகண்டனிடம், மேற்கண்ட 2 பேரும், காஞ்சிபுரம் அருகே அடகு வைத்து, மீட்கப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருப்பதாகவும், அதனை  ஒரு கிராம் 2 ஆயிரத்துக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.அதை நம்பிய மணிகண்டன்,  20 லட்சத்தை எடுத்துக் கொண்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர், அவர்களுடன் சேர்ந்தார். மாலை பாலுசெட்டிசத்திரம் பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள், கீழம்பி பைபாஸ் சாலை அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி, மணிகண்டனிடம் இருந்த 20 லட்சத்தை பறித்து சென்றனர்.=

இதுகுறித்து மணிகண்டன் பாலுசெட்டி  போலீசில் புகார் செய்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் காட்பாடியில் பதுங்கியிருந்த சரவணவேல், ராஜ்குமார், கலைமணி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  10 லட்சம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில், சரவணவேல் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் 1500 கொடுத்து, அனுமதியின்றி துப்பாக்கி வாங்கி பயன்படுத்தியது தெரிந்தது. மேலும், இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishnagiri ,jewelry shop , Krishnagiri jewelry shop ,arrested
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி