×

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் மனைவிகளுக்கு அரசு பணி நியமன ஆணை: வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் மனைவிகளுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்- ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை திடீரென வேகமாக ஓட்டி வந்து, வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி தாக்குதல் நடத்தினான். இதில் அந்த வாகனமும், பஸ்சும் வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் பஸ்சில் இருந்த வீரர்கள் உடல் சிதறி பலியாகி விழுந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 41 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உடல் சிதறி கோரமாக பலியாயினர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் ஆகிய 2 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குப்படும் என்றும் அவர்களிடம் மனைவிகளுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் சிவச்சந்திரனின் மனைவி காந்திமதிக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியும், சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு இளநிலை உதவியாளர் பணியும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,wives ,Tamil Nadu ,attack ,Pulwama ,veterans , Pulwama attack, Tamil Nadu veterans, wife, government job appointment order, chief minister Palanisamy
× RELATED குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட்...