×

பாகிஸ்தான் வழக்கம்போல் மறுப்பு

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவசர அவசரமாக சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் குரேஷி அளித்த பேட்டியில், ‘‘முதலில் அவர்கள் பாகிஸ்தானில் அத்துமீறி இருக்கின்றனர். இது, எல்லைக்கட்டுப்பாடு கோடு விதி மீறலாகும். இதிலிருந்து பாகிஸ்தான் தன்னை தற்காத்துக் கொள்ள பதிலடி தருவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு’’ என்றார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘முசாபராபாத் பகுதியில் இந்திய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. இதற்கு பாகிஸ்தான் விமானப்படை உரிய நேரத்தில் பதிலடியாக குண்டுகளை வீசியது. ஆனாலும் பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள் தப்பிச் சென்று விட்டன. இதில் எந்த உயிரிழப்பும் சேதமும் ஏற்படவில்லை’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Pakistan's denial, as usual
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...