×

ஓடும் ரயிலில் திமுக எம்எல்ஏவிடம் பணம், நகை திருட்டு

சென்னை: மதுரையில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த திமுக எம்எல்ஏவிடம் இருந்து 2 சவரன் மோதிரம், ரூ.1 லட்சம் பணம், செல்போனை திருடி ெசன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி (57). இவர், கட்சி பணிக்காக நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை வந்தார். ரயில் நேற்று காலை 4.45 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது, எம்எல்ஏ சக்கரபாணி தனது பைகளை எடுத்துக்கொண்டு இறங்க முயன்றார்.

அப்போது, அவர் கொண்டு வந்த பை ஒன்று மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பயணம் செய்த ரயில் பெட்டி முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் அவரது பை கிடைக்க வில்லை. திருடுபோன பையில் 2 சவரன் மதிப்புள்ள 2 மோதிரங்கள், ரூ.1 லட்சம் ரொக்க பணம், விலை உயர்ந்த செல்போன் ஒன்று இருந்தது. இதையடுத்து எம்எல்ஏ சக்கரபாணி எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK MLA , Running train, DMK MLA, money, jewelry, theft
× RELATED அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர்...