×

மார்ச் 1ம் தேதி குமரிக்கு வரும் மோடிக்கு வைகோ கருப்புக்கொடி காட்ட வேண்டாம் : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

நாகர்கோவில்: மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு வைகோ கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:   தமிழகத்தில் நாங்கள் தான் ஏ அணி என கமல் கூறியுள்ளார். சினிமாவில் தான் ஏ சான்றிதழ், யு சான்றிதழ் கொடுக்கப்படும். கமல் எந்த அடிப்படையில் அவரது கூட்டணியை ஏ என கூறினார் என தெரியவில்லை. விஜயகாந்த் எங்களுடன் வருவார் என நம்புகிறேன். வைகோவுக்கு எனது வேண்டுகோள் ஒன்றுதான்.

பிரதமர் மோடி, குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைக்க மார்ச் 1ம் தேதி வருகிறார். எனவே அவருக்கு கருப்புக்கொடி காட்டி எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வேண்டாம். எனது கோரிக்கையை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். வரும் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜ ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சியினர் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வருவார்கள் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnathirakrishnan ,Vaiko ,Kumari ,Modi , Vaiko for Modi,Do not show black hat
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...