டெல்லி : இது புதிய இந்தியா, இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது என்று தேசிய போர் நினைவகம் திறப்பு விழாவில் பிரதமர் உரையாற்றி வருகிறார். அப்போது ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும் வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம் என்றும் பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி உரையில் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி