×

சிவகங்கை அருகே கிராமத்திற்கு சொந்தமான இடத்தில் பட்டா மாற்றம்... கிராம மக்கள் சாலை மறியல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கிராம மக்களுக்கு சொந்தமான நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு தருவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். செம்பூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான 36 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலங்களை 5-க்கும் மேற்பட்ட வேறு சில நபர்களுக்கு பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாததால் கிராம மக்கள் சிவகங்கை- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கைது செய்து சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shift ,village ,Sivaganga , Patta ,shift , village ,Sivaganga
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...