அரியலூர்: லஞ்சம், ஊழலுக்கெதிரான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்தார்.அரியலூர் மாவட்டத்தில் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரியலூரிலுள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற அறிவியல் கண்காட்சியினை பார்வையிட்டு மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் சகாயம் ஐ.ஏ.எஸ் கூறுகையில், ‘‘தற்போது வரக்கூடிய அரசு அலுவலர்கள் கூட நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்று உறுதிமொழி ஏற்றுகொண்டு வருவதை என்னால் பார்க்க முடிகிறது. பல கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற சொல்லோடு பணிபுரிவதை நாம் அறிகிறோம். லஞ்சம், ஊழலுக்கெதிரான மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி