×

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 25 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குட்டத்து ஆவரம்பட்டியில் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், தேனி, சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 520 மாடுகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு பீரோ, கட்டில், பிரிட்ஜ், தங்கம் மற்றும் வெள்ளிக்காசு, அண்டா, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 25 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jungle ,Dindigul , Jallikattu, St. Anthony temple festival
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...