×

பார்வதிபுரம் விண்மீன் பள்ளி மாணவர்கள் களப்பயணம்

நாகர்கோவில்: நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அமைந்துள்ள விண்மீன் பள்ளி மாணவர்கள் கடந்த 15ம்தேதி களப்பயணமாக நாகர்கோவில் ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களே கன்னியாகுமரி செல்வதற்கான அனுமதிச்சீட்டு வாங்கினர். பின் நிலைய மேலாளர் ஜெயசிங் மாணவர்களுக்கு ரயில்வே என பெயர் வர காரணம், மற்ற பயணங்களுக்கும், ரயில் பயணத்திற்கும் உள்ள வேறுபாடு, சிக்னல் பற்றிய விளக்கம், ஆபத்துகள், பயணச்சீட்டு பெறுவதற்கான முறைகள், முதல்தர பெட்டிகள், இரண்டாம் தர பெட்டிகள், குளிரூட்டப்பட்ட பெட்டிகள் பற்றிய விளக்கம், தக்கல் பயண சீட்டு பெறும் முறைகள், முன் பயணச்சீட்டு பெறும் முறைகள்  குறித்து விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை செயல் அதிகாரி எட்வின் மற்றும் பள்ளி முதல்வர் ஆனிஸ்ரோஜா செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Parvathipuram ,galaxy school students , Parvatipuram, constellation school, students, sightseeing
× RELATED விஜயதரணி கன்னத்தில் கை வைத்த பூசாரி: ஆசீர்வாதத்தில் இது புதுசு…