×

திருத்தணி அருகே டிக் டாக் வீடியோவால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை

திருவள்ளூர்: கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக்கில் பேச செய்த இளைஞரை அவரது நண்பர் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாளவேடு கிராமத்தில் இந்த விபரீதம் நடந்துள்ளது.

தாளவேடு கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் 2 நாட்களுக்கு முன்பு டிக் டாக் செயலியில் வெளியிட்ட வீடியோ குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வெங்கட்ராமனின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கட்ராமன் தன்னை டிக் டாக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பேசும்படி கோரிய நண்பர் விஜயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நண்பருக்கு மதுவை அளவுக்கு அதிகமாக ஊற்றி கொடுத்துவிட்டு கொலை செய்த வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இளைஞர்களிடையே ஏற்பட்ட டிக் டாக் மோகம் கொலையில் முடிந்திருப்பது திருத்தணி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruttani , Tik Talk, video, youth, murder
× RELATED திருத்தணி அருகே கரும்பு தோட்டத்தில்...