×

பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம் : அமித்ஷா பேச்சு

ராமநாதபுரம் : மோடி தலைமையிலான அரசு, தீவிரவாதத்திற்கு எள்முனை கூட இடம் அளிக்காது என்றும், புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களான சுப்பிரமணியன், சிவசந்திரன் தாக்குதலில் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்றும், கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுவத்துவதாகவும் கூறினார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்றும், பல்வேறு சிறந்த தலைவர்களை இந்தியாவிற்கு கொடுத்த பூமி தமிழகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amit Shah ,Earth , Amit Shah, BJP, Modi, Pulwama attack, parliamentary election
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...