×

ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சவிதா மருத்துவக்கல்லூரி விடுதியில் திடீர் தீ விபத்து: 9 அறைகள் எரிந்து நாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள சவிதா மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன. தண்டலம் பகுதியை அடுத்துள்ள செட்டிப்பேடு பகுதியில் இன்று அதிகாலை 6 மணி அளவில் சவிதா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. 1,700 மாணவர்கள் தங்கியுள்ள 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 228 அறைகள் உள்ளன. இதில் 4வது மாடியில் ஏசி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ பற்றியவுடன் மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு விடுதி அறைகளில் இருந்து வெளியேறினர்.

தகவலறிந்து ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம், பூந்தமல்லி, சிப்காட் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் 4வது மடியில் உள்ள 9 அறைகள் எரிந்து சேதமைடைந்தன. தீ பிடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி 10 மாணவர்களுக்கு சிறு பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவர்கள் சிகிச்சைக்காக சவிதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சவிதா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fire ,rooms ,Savita Medical College ,Sriperumbudur , Sriperumpudur,Savita Medical College,Hostel,Fire Accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா