×

பாகிஸ்தானில் கடும் மழை; 16 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பகதுன்க்வா மற்றும் கில்ஜித் பாகிஸ்தான் மாகாணங்களில் ெதாடர்ந்து மழை பெய்தது.  மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் நிலச்சரிவு மற்றும் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவங்களில் 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். லயே பகுதியில் பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது. இதேபோல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்டானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேரும், கஹூடாவில் மேற்கூரை உடைந்து விழுந்ததில் ஒரு குழந்தையும் உயிரிழந்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan , Pakistan, rain, 16 killed
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்