×

சொத்து பிரச்னையில் தாயை கொடூரமாக கொன்ற மகன் கைது

காஜியாபாத்: சொத்து பிரச்னையில் தாயை கொடூர கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.காஜியாபாத்தை சேர்ந்தவர் ராம்வதி(55). இவரது மகன் மனோஜ்(21). இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை, பேசிக்கொண்டிருந்தபோது, மூதாதையர் நிலம் தொடர்பாக மனோஜ் மற்றும் ராம்வதிக்கு தகராறு ஏற்பட்டது. சொத்தை தரக்கோரி மனோஜ் பிடிவாதம் பிடிக்கவே, ராம்வதி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், வீட்டிலிருந்த காலி சிலிண்டரை எடுத்து ராம்வதியை சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி ராம்வதி கூக்குரலிட்டார். அதனை கேட்டு அங்கு வந்த பக்கத்து வீட்டு பெண், மனோஜின் கொலை வெறி தாக்குதலை கண்டு, கதவை வெளியே இருந்து பூட்டியபடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு வந்தபோது ராம்வதி இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மனோஜை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Property problem, mother murder, son arrested
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை