×

பெங்களூரு அருகே ரூ.3.70 லட்சம் திருட்டு

பெங்களூரு: பெங்களூரு நெலமங்களாவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரம் முடிப்பதற்காக ஜெயபிரகாஷ் என்பவர் ரூ.3.70 லட்சத்துடன் சென்றுள்ளார். அலுவலகத்தின் முன்பு பைக்கை நிறுத்திய அவர் பத்திர பதிவுகளை முடித்துவிட்டு, நிலம் கொடுத்தவருக்கு ரூ.3.70 லட்சத்தை கொடுப்பதற்காக பைக்கை நோக்கி வந்தார். சாவியை வைத்து டிக்கியை திறக்க முயன்றபோது, அது ஏற்கனவே திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த ரொக்கப்பணமும் பேக்குடன் மாயமாகியிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று விசாரித்தனர். அதில் மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு, பைக் டிக்கியை உடைத்து பணத்தை திருடியிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நெலமங்களா டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bengaluru , s. 3.70 lakhs, theft, and relief office
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...