×

புல்வாமா தாக்குதலால் ஸ்ரீநகருக்கு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு: டெல்லியில் இருந்து ரூ24,500

புதுடெல்லி: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ஸ்ரீநகருக்கு செல்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணம் ரூ24,500 வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு விமான கட்டணமாக வழக்கமாக ரூ5,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதால் ஸ்ரீநகர் வரும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு விமான கட்டணம் ரூ13,000 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று பயணம் செய்வதற்கு டெல்லி- ஸ்ரீநகருக்கு உடனடி விமான கட்டணமாக ரூ15,500 முதல் 24,500 வரை வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதேபோல்  நேற்று மும்பையில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ24,150 ஆகவும், அதிகபட்சமாக எக்னாமிக்ஸ் வகுப்பில் ஸ்ரீ41,000மும் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக டிராவல்ஸ் நிறுவன முகவர் ஒருவர் தெரிவித்தார். இந்த வழி தடத்தில் வழக்கமாக ரூ9000 முதல் 12000 வரை வசூலிக்கப்படும். எனினும் ஸ்ரீநகருக்கு அடுத்த சில நாட்களில் செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airtel ,attack ,Srinagar ,Pulwama ,Delhi , Pulwama attack, Srinagar, flight ticket fees hike
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...