×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை உள் தமிழக நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும், அதே பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றின் சுழற்சியாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் விளக்கமளித்துள்ளது.

பல நாட்களுக்கு பின்னர் நேற்று உள் தமிழகத்தில் சில இடங்களில் மழை பதிவாகி உள்ளதாகக் கூறியுள்ள அந்த மையம், இன்றும் பரவலாக இடி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அந்த மையம் கணித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Puducherry ,rainfall ,places , Tamilnadu, Puducherry,three days,few places
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி