ஹகுயி: குல்பூஷண் ஜாதவ் மரண தண்டனைக்கு எதிரான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய என மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடி வருகிறார். அதில், குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் போலீஸ் எப்போது கைது செய்தது என்பதை தெரிவிக்கவில்லை என்றும், ஜாதவ் மீதான வழக்கு, குற்றச்சாட்டு விவரத்தை இந்தியாவுக்கு பாகிஸ்தான் தரவில்லை எனவும் தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். இதையடுத்து குல்பூஷண் ஜாதவ் வழக்கை பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக புகார் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி