×

கிரண்பேடியின் அழைப்பை ஏற்றார் நாராயணசாமி...... இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை

புதுச்சேரி: புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் முதல்வர் மற்றும் அமைச்சர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை கண்டித்து கடந்த 13-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் தொடங்கிய மறுநாள் ஆளுநர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்று விட்டார். 6 நாட்கள் அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 20-ந் தேதி தான் புதுவை திரும்புவதாக இருந்தது.

ஆனால் புதுவையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் ஊரில் இல்லாமல் இருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது. போராட்டமும் தீவிரமடைந்து நிலைமை மோசமடைந்தது. எனவே, ஆளுநர் கிரண்பேடி தனது டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று புதுவை திரும்பினார். நேற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சரின் நிபந்தனைகளை ஆளுநர் கிரண்பேடி ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் 6-வது நாளாக  தொடரும் நிலையில், இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் மாளிகைக்கு வரும்படி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்துள்ளார். கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். மக்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narayanasamy , Kiranbedi, Narayanasamy, Talks, Puducherry
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...