×

தேர்தலை கணக்கில் வைத்து எதை எதையோ செய்கிறார்கள்: அய்யாக்கண்ணு, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர்

விவசாயிகளுக்கு மத்திய அரசு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை தரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டரை ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் இல்லை. என் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இந்த தொகை கிடையாது என்று எழுதி தர வேண்டும். பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் என் வீட்டை சேர்ந்தவர்கள் யாரும் எந்த வித பயன்கோரி விண்ணப்பிக்க மாட்டார்கள் என்று எழுதி தர வேண்டும் என்று கூறுகின்றனர். ஒரு நாள் வருமானம் ரூ.22க்கு மேல் இருந்தால் பெரிய விவசாயி. அதனால், அவருக்கு கிடையாது. அந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2222க்கு மேல் வந்தால் அவர் பெரிய பணம் படைத்த விவசாயி என்பது போன்று குறிப்பிட்டுள்ளனர். நாங்கள் மாதம் ரூ.5 ஆயிரம் பென்ஷன் கேட்டோம். சிறு, குறு, பெரிய விவசாயி என்று பாரபட்சம் பார்க்க கூடாது. யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும் என்று ேகட்டோம். அவர்களுக்கு மகன், மகள் என யார் இருந்தாலும் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்று தான் கூறினோம்.

ஆனால், ஆண்டு வருமானத்தை காரணம் காட்டி விவசாயிகளுக்கு தர வேண்டிய வெறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை கூட பறிக்கப்படுகிறது. 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை என்றால் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்று கூறுகின்றனர். அவர்களின் ஒரு நாள் வருமானம் ரூ.2 ஆயிரம் மேல் உள்ளது அவர்களை எங்கேயோ வைத்து விட்டு, விவசாயிகள் மாத வருமானம் ரூ.2 ஆயிரம் வந்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.  ஏதோ அடிமைகளுக்கு தருவது போன்று பணம் தருகின்றனர். நாங்கள் 24 மணி நேரம் விழித்திருக்கிறோம். இரவு, பகலாக பயிர்களை காப்பாற்றி விளைவிக்கிறோம். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு தான் பணம் தருகின்றனர். அண்ணன், தம்பி நான்கு பேர்களுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அவர்களில் ஒருவருக்குத் தான் பணம் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.

எனவே, பாரபட்சமின்றி கொடுக்கும் பணத்தையாவது உருப்படியாக அனைவருக்கும் போய் சேரும் வகையில் தர வேண்டும். இந்த ரூ.6 ஆயிரம் என்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது தான். வறுமைக்ேகாட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் தரப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  தனது கட்சிக்காரர்களுக்கு  பணம் கொடுப்பதற்காக தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அவர்களை சரிப்படுத்த தான் பணம் தரப்போகின்றனர். அவர்கள் கட்சிக்காரர்கள் என்ன ரூ.22க்கு கீழ் வறுமைகோட்டிற்கு கீழாக இருக்க போகிறார்கள். ேதர்தல் வரப்போகிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செய்கிறார்கள்.  கிராமப்புறங்களில் ஓட்டு வாங்க வேண்டும் என்று தான் பணம் கொடுக்கின்றனர்.  உழைத்து, உழைத்து ஓடாய் தேயும் விவசாயிகளுக்கு மகன், மகள், நிலம் இருந்தாலும் மாதம் ரூ.5 ஆயிரம் தர வேண்டும். ஒரு ஆசிரியர், தாலுகா ஆசிரியர் ஓய்வு பெறுகின்றனர்.அவர்களுக்கு மகன், மகள் இருக்கிறார்கள் என்பதற்காக பென்ஷன் நிறுத்துவார்களா. அவர்களுக்கு ஒரு அளவீடு எங்களுக்கு ஒரு அளவீடா. எங்களால் வெளியே வர முடியவில்லை என்பதற்காகவும் போராட்டம் நடத்த மாட்டார்கள் என்பதற்காகவும் மத்திய,மாநில அரசுகள் எங்களை வஞ்சிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : something ,keep,account,elections,ayyakkannu, South Rivers,Link growers, union leader
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...