×

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்ப உள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் தேமுதிக துணைப்பொதுசெயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிகாலை 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் இருந்து 25 மணிநேரம் விமானத்தில் பயணம் செய்த களைப்பால் விஜயகாந்த் ஓய்வெடுத்தார் என பிரேமலதா தெரிவித்தார். மேலும் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் பேட்டியில் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,Chennai ,volunteers ,America ,Delightful , DMDK, Vijayakanth, USA, treatment, health, Chennai, airport
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...