மதுரை : ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியிடாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாத தொல்லியல்துறை செயல் கண்டிக்கத்தக்கது என்றும், கீழடி, ஆதிச்சநல்லூர்
அகழ்வாராய்ச்சிகள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்தான் நடத்தப்பட்டன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது இந்தியாவில்தான் தமிழகம் உள்ளதா என்ற ஐயம் ஏற்படுகிறது என நீதிபதிகள் கூறினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி