×

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில்  காலை 11.30 மணிக்கு ஏப்ரல் 8,15,22,29 மற்றும் மே 6,13,20,27 ஆகிய தேதிகளில் புறப்பட்டு மறுநாள் இரவு 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மேலும் இரவு 8.40 மணிக்கு ஏப்ரல் 1,8,15,22,29 மற்றும் மே 13,20,27 தேதிகளில் புறப்பட்டு மறுநாள் காலை 9.20மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மேலும் செங்கோட்டையில் இருந்து மாலை 4.25 மணிக்கு ஏப்ரல் 2,9,16,23,30 மற்றும் மே 7,14,21,28 ஆகிய தேதிகளில் புறப்பட்டு எழும்பூருக்கு காலை 5.45மணிக்கு வந்தடையும்.
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 2,9,23 மற்றும் மே 7,14,21, 28 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும், அதைப்போன்று நாகர்கோவில் இருந்து 3,10,17,24 மற்றும் மே 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு புறப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagercoil , Special train, Nagercoil
× RELATED நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு