×

வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் முருகன், நளினி உடல்நிலையை கண்காணிக்க டாக்டர்கள் நியமனம்

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் உடனடியாக  முடிவெடுக்க வலியுறுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 7ம் தேதி முதலும், பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி   நளினி கடந்த 9ம் தேதி முதலும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 8வது நாளாக நேற்று முருகன், நளினியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அது  தோல்வி அடைந்தது.

இதற்கிடையில்  முருகனுக்கு நேற்று முன்தினம் சிறை மருத்துவமனையில், 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. நளினியும் உடல் சோர்வாக காணப்படுகிறார்.  இருவரின் உடல்நிலையை கண்காணிக்க வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும்  மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரத்த மாதிரி எடுப்பு:
இந்நிலையில் 6வது நாளாக நேற்றும் நளினி உண்ணாவிரதம் இருந்து வந்ததால் அவர் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை டாக்டர்கள் அவரது ரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jail ,doctors ,Vellore ,Nalini ,Murukan , Vellore prison, continuous fasting, Murugan, Nalini, health, doctors
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது