×

திருவனந்தபுரத்தில் பேஸ்புக் நண்பர்களை மிரட்டி பணம் பறிப்பு: காதல் ஜோடி அதிரடி கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பேஸ்புக் மூலம் பழகி பணம் பறித்த பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்  கணியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). கோட்டயம் பாம்பாடியை சேர்ந்தவர் ரேணு (24). காதலர்களான இவர்கள் இருவரும் எப்போதும் சேர்ந்தே சுற்றி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் ஒரு பேஸ்புக் கணக்கு தொடங்கி தான் ஒரு பெண் என கூறி பலரிடம்  பழகி வந்துள்ளார். அவருக்கு ஏராளமான நண்பர்களாக இருந்தனர். இந்த நிலையில் சுரேஷ் தனது காதலி ரேணுவை பயன்படுத்தி பலரை மிரட்டி பணம் பறிக்க தொடங்கி உள்ளனர். எழுமத்தூர்  பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மிரட்டி தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த  கூறியுள்ளார். அந்த நபர் சுரேஷ் கூறிய வங்கி கணக்கில் பணத்தை அனுப்பி  வைத்தார். மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர்  பெரிந்தட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்தனர். சுரேஷ் கொடுத்த வங்கி கணக்கை வைத்து பரிசோதித்த போது அது பாம்பாடியை சேர்ந்த  ஒருவரின் வங்கி கணக்கு என ெதரியவந்தது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ரேணுவின் தாத்தா என தெரியவந்தது. இதையடுத்து ரேணுவையும், சுரேசையும்  போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : friends ,Trivandrum , Trivandrum, Facebook Friend, Extortion, Money Flush
× RELATED குளச்சல் அருகே தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்