×

தாராபுரத்தில் உணவு தானிய கடையில் கொள்ளை.. பணத்தை கொள்ளையடித்த காட்சி சிசிடிவியில் பதிவு: போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உணவு தானிய விற்பனை மையத்தின் மேற்கூரையை உடைத்து கொள்ளையடித்த நபரின் உருவம் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தாராபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் உழவர் சந்தை அருகே உணவு தானிய கொள்முதல் மற்றும் விற்பனை மையம் வைத்துள்ளார்.

நள்ளிரவில் இவரது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கிடைத்துள்ள சிசிடிவி பதிவு மற்றும் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒருமாதத்தில் மட்டும் இதேபோல் 10 கடைகளில் திருடப்பட்டிருப்பதாக அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,food grain shop , robbery,food grain shop,Tharapuram,recorded,CCTV,police,investigated
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 6 வழிப்பறி...