×

சபரிமலைக்கு செல்ல இளம்பெண்கள் முடிவு... போராட்டக்காரர்கள் கூடுவார்கள் என்பதால் மீண்டும் பதற்றம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முகநூல் பக்கத்தில் இணைந்துள்ள பெண்கள் குழுவாக செல்ல திட்டமிட்டிருப்பதால் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. 2 நாட்களாக பெண்கள் யாரும் தரிசனம் செய்யவில்லை. சபரிமலையில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம்.

திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பெண்கள் அமைப்பினர் சபரிமலைக்கு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நவ்தான கேரளம் சபரிமலை என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் அவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் எப்போது வருவார்கள் என்ற தகவல் இல்லை. போராட்டக்காரர்களும் இளம்பெண்களை தடுத்து நிறுத்துவார்கள் என்பதால் நிலக்கல் முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : girls ,protesters ,Sabarimala , Young women,Sabarimala,tension,protest,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்