×

கும்பமேளாவில் தீ பீகார் ஆளுநர் தப்பினார்

அலகாபாத்: கும்பமேளாவில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூடாரங்கள் எரிந்து நாசாமாயின. இப்பகுதியில் தங்கியிருந்து பீகார் ஆளுநர் லால்ஜி டான்டன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். உத்தரப் பிரதேசம் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதற்காக அலகாபாத்தின் அரைல் பகுதியில் திரிவேணி சங்குல் என்ற இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள ஒரு கூடாரத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள இரு கூடாரங்களுக்கு பரவியது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப்பகுதியில் தங்கியிருந்த பீகார் ஆளுநர் லால்ஜி டான்டனும் காயமின்றி தப்பினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Bihar ,Kumbh Mela , Governor of Kumbh Mela, Fire, Bihar Governor, Lalgi Dandan
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!