×

திருவண்ணாமலை அருகே கவுதம நதியில் அண்ணாமலையார் தீர்த்தவாரிக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற உள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாசி மகத்தையொட்டி வரும் 20ம் தேதி திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து நதியில் புனித நீராடுவார்கள்.தீர்த்தவாரியையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கவுதம நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் தொட்டியின் ஒரு பக்கம் சேதமடைந்திருந்தை சீரமைக்கும் பணியும், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக போக்குவரத்து சாலைகள் சீரமைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. போதிய மழை இல்லாததால் கவுதமிநதியில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதில் தீர்த்தவாரி நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டு இதேபோல் சிமென்ட் தொட்டியில் தண்ணீர் நிரப்பி தீர்த்தவாரி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான பணிகளை விழாக்குழுவினர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : theertham ,Annamalaiyar ,river ,Thiruvannamalai ,Gudamalai , Thiruvannamalai, Goutham river, Theerthavari
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...