பின்னர் காரில் சிறுமியுடன் வனப்பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சிலர் சந்தேகத்தின்பேரில் காரை மறித்து விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தனது மனைவி என கூறியுள்ளார். ஆனால் சிறுமி பள்ளி சீருடையில் இருந்ததை சுட்டிக்காட்டி பொதுமக்கள் விசாரித்ததில், நடந்த சம்பவம் குறித்து மாணவி அழுது கொண்டே கூறியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் தொழிக்கோடு ஜமா அத் நிர்வாகிகளிடம் கூறினர்.இதையடுத்து அவரை இமாம் பதவியில் இருந்து ஜமா அத் நிர்வாகிகள் நீக்கினர்.இந்நிலையில், நேற்று தொழிக்கோடு பள்ளிவாசல் ஜமா அத் தலைவர் விதுரா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் இமாம் ஷெபீக் அல் காசினி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி