×

வேலூர் அருகே சினிமா பாணியில் சரக்கு லாரிகள் கடத்தல்... போலீசார் தீவிர விசாரணை

வாலாஜா: வேலூர் மற்றும் ஓசூர் அருகே சினிமா பாணியில் ஓட்டுநர்களை அடித்து உதைத்து 2 லாரிகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். ஓசூரில் காலி அட்டை பெட்டிகளுடன் ஆந்திர மாநிலம் ஆந்திர மாநிலம் குண்டூருக்கு விருதுநகரை சேர்ந்தவர் செல்வகுமார்(52) என்பவர் லாரியை ஒட்டி சென்றார். பள்ளிகொண்டா அருகே சென்ற போது இரண்டு லாரிகள் அருகே வந்து சரக்கு லாரியை மறித்துள்ளது. அப்போது, லாரியில் இருந்து இறங்கிய வடமாநிலங்களை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென லாரியில் ஏறி செல்வகுமாரை சரமாரி அடித்து உதைத்து காவிரிப்பாக்கம் அருகே ஓட்டுநரை கட்டிப்போட்டுவிட்டு லாரியை கடத்தி சென்றுள்ளனர்.

திருச்சியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஒட்டி சென்ற மற்றோரு லாரியையும் வாணியம்பாடி அருகே அதே போல் மர்ம நபர்கள் மடக்கியுள்ளார். கண்ணதாசனை அடித்து உதைத்து 4ஆயிரம் ரூபாய் பறித்து கொண்ட மர்ம நபர்கள் அவரை காவேரிபாக்கம் அருகே தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். ஓட்டுநர்களை தாக்கி லாரிகள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்காக ஓட்டுனர்கள் தாக்கப்பட்டார்களா?, வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore ,investigations , Vellore, cargo trucks, smuggling, police investigation
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...