×

9 வயது சிறுவனுக்கு 36 வயது பெண் பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் வழக்கு

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 36 வயது பெண் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலம் தேஞ்சிப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி (36, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இந்த  தம்பதிக்கு 9 வயதில் மகன் உண்டு. இவர்களது வீட்டின் அருகே சுமதியின் அண்ணன் வசித்து வருகிறார். சிறுவன் அடிக்கடி தனது மாமா வீட்டிற்கு சென்று  விளையாடுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவனின் உடலில் சில மாற்றங்களை அவரது பெற்றோர் கண்டுபிடித்தனர். எனவே சிறுவனை  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிறுவனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை  கண்டு பிடித்துள்ளார். இது குறித்து பெற்றோர் தேஞ்சிப்பாலம் போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து தேஞ்சிப்பாலம் சப்-இன்ஸ்பெக்டர் வினுதாமஸ் கூறுகையில், சுமதிக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.  இதனால் வேண்டுமென்றே புகார் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. என்றாலும் சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ  பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Boy, girl, sexual harassment, pokso law, case
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...