×

மணப்பெண்ணுக்கு 18 வயது ஆகவில்லை திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள் விரக்தியில் மணமகன் தற்கொலை

ஜெயங்கொண்டம்: திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் விரக்தியடைந்த மணமகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கவரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (26). ஒசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து  வந்தார். இவரது தந்தை ஆராவமுதன் இறந்துவிட்டார். தாய் வனஜா மட்டும் உள்ளார். இவரது இரண்டு சகோதரிகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து  வருகின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணத்திற்கு நாள் குறித்தனர். திருமண  பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வைக்கப்பட்டு வீட்டில் பந்தல்கால் நடபட்டது. நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் பெண்ணின் உறவினர், 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்து கொடுக்க போவதாக குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அதன் பேரில் அதிகாரிகள் பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பெண்ணை மீட்டு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு  அழைத்து சென்றனர். திருமணம் நின்றதால் மன உளைச்சலில் தவித்த சீனிவாசன், நேற்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bride , Bride, marriage, frustration, groom, suicide
× RELATED மணப்பெண் மாயம்