போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலாண்டுரை சேர்ந்தவர் சின்னபையன்(26) விவசாயி. தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கு இலவசமாக பம்பு செட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க ஆணை பிறப்பித்திருந்தது. இதற்கு சின்னபையன் விண்ணப்பித்திருந்தார். இதற்கான சான்று பெற வருவாய்த் துறையிடம் மனு கொடுத்திருந்தார். மனு பரிசீலனைக்கு வந்தபோது வருவாய் ஆய்வாளர் தசரதன்(57), ரூ.7,500 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சின்னபையன் புகார் கொடுத்தார். நேற்று லஞ்சப்பணத்தை சின்னபையனிடம் இருந்து பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் தசரதனை கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி