×

பழநி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை: அடுத்தடுத்து விஷம் குடித்த பரிதாபம்

பழநி: பழநி அருகே கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி சிவகிரிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மோகனபிரியா(20). இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, 4 மாதத்திற்கு முன்பு மோகனபிரியா குழந்தையுடன் தட்டான்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு, மோகனபிரியாவிற்கும் பழைய ஆயக்குடியை சேர்ந்த கார்த்தி(21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மோகனபிரியா ஆயக்குடியில் உள்ள கார்த்தியின் தோட்டத்திற்கு சென்றார்.

அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனமுடைந்த மோகனபிரியா செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, கார்த்தி பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று மோகனப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்த கார்த்தியும் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பழநி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallakadal ,Palani ,succession , Palani, affair, the couple commits suicide
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...