×

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை: 6 பேர் கொண்ட கும்பல் துணிகரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் செங்குன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் குமார் என்பவர் ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இவர், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை வெட்டியுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் கோவை மாவட்டம் புளியகுளத்தில் பிரபல ரவுடி லியோ மார்ட்டின் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. ரவுடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி லியோ மார்ட்டின் புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் சண்முகம் ஆகியோரிடம் கஞ்சா கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மார்டினை கத்தியால் குத்தி விட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல ரவுடியை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி தீவிரமாக வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attorney ,Vadakalai ,Tiruvallur Vettikkalai , murder,attorney,Tiruvallur,gang,people,barracks
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்...