சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று பிராட்வே பிரகாசம் சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: தமிழக அரசின் பட்ஜெட்டில் தலித் மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ₹800 கோடி ஊழல் நடந்து உள்ளது.மத்திய, மாநில அரசுகள் தலித் மக்களின் நலனில் அக்கறை காட்டவேண்டும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி