புதுடெல்லி: நாடாளுமன்ற கமிட்டி முன்பு, டிவிட்டர் நிறுவன சிஇஓ ஜேக் டோர்சே நேரில் ஆஜராக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் ரீதியாக பல்வேறு தகவல்கள் பகிரப்படுகின்றன. இதுதொடர்பாக, டிவிட்டர் இந்தியா நிறுவன தலைவரை பாஜ எம்பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப கமிட்டி முன்பாக ஆஜராகக் கோரி கடந்த 1ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அந்நிறுவனம் அனுப்பிய கடிதத்தில், ‘முக்கிய முடிவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் யாரும் டிவிட்டர் இந்தியா நிறுவனத்தில் இல்லை. எனவே, டிவிட்டர் சிஇஓ மற்றும் உயர் அதிகாரிகள் யாரும் நாடாளுமன்ற கமிட்டி விசாரணையிடம் ஆஜராக மாட்டார்கள்’’ என கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி