×

சென்னை ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் முகுந்த்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, தமிழக வீரர் முகுந்த் சசிகுமார் தகுதி பெற்றார். கால் இறுதியில் இங்கிலாந்து வீரர் பிரைடன் கிளெய்னுடன் நேற்று மோதிய முகுந்த் 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த கிளெய்ன் 6-3 என வென்று பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த இந்த செட்டில் 7-6 (7-3) என்ற கணக்கில் போராடி வென்ற முகுந்த் அரை இறுதிக்கு முன்னேறினார். முதல் நிலை வீரர் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் (தமிழகம்) தனது கால் இறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை எளிதாக வீழ்த்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai Open Tennis ,semi-finals , Chennai Open Tennis semi-finals
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு