×

துபாய் விமானத்தில் தூத்துக்குடி பயணி திடீர் மரணம்

சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ்  நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு புறப்படத் தயாராகி கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர் (35) என்பவர் துபாய் செல்ல விமானத்தில் அமர்ந்திருந்தார். பயணிகள்   194 பேர் இருந்தனர்.  அப்போது அப்துல்காதருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.  வலியால் துடித்தார்.   இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். ஆனால் அப்துல் காதர் மயங்கி சாய்ந்து விட்டார். இதையடுத்து விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விமான நிலைய மருத்துவக்குழுவினர் விமானத்துக்குள் நுழைந்து பரிசோதித்தனர். அதில்  அப்துல்காதர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து பயணிகள் அனைவரும் சோகம் அடைந்தனர். அவருடைய உடல் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. விமான நிலைய போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில் பயணி ஒருவர் விமானத்துக்குள்ளேயே உயிர் இழந்ததால் விமானத்தை மீண்டும் முழுமையாக  சுத்தம் செய்த பிறகே இயக்க முடியும் என்று விமானி அறிவித்து விட்டார்.  இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலே இருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வுக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்தனர். அதன்பின்பு மீண்டும் பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர். 1. 30 மணி நேரம் தாமதமாக விமானம் இரவு 11. 10க்கும் புறப்பட்டு சென்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flight ,death ,Dubai , Dubai flight, Thoothukudi passenger, death
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...