×

பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் மீது புகார்…! சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு

நாமக்கல்: பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் மீது எழுந்த புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். போலீசுக்கு எதிராக கடுமையான குற்றசாட்டு உள்ள வழக்காக இருப்பதால் தஞ்சை எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். தனது நண்பர் கைது குறித்தது விசாரணை நடத்த வந்த வெப்படை போலீசார் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். மது அருந்திவிட்டு, தனக்கு மாத்திரைகளை கொடுத்து இரவு முழுவதும் போலீஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தஞ்சை காவல்த்துறை, எஸ்.பி.யிடம் அளித்தும் நடவடிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட பெண் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி வெளியில் கூறினால் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியதாக அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பெண் டி.எஸ்.பி. மூலம் விசாரித்து, உரிய பாதுகாப்பு வழங்கி, மறுவாழ்வு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். …

The post பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் மீது புகார்…! சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி மனு appeared first on Dinakaran.

Tags : CMC GP ,RC GI ,NAMACKAL ,CM. GP ,RC GI TD ,RC GP ,Dinakaran ,
× RELATED 15 வயது சிறுமியை திருமணம் செய்து...