×

எந்த கட்சிக்கும் அதிமுக பயப்படாது: அமைச்சர் பெஞ்சமின் பேட்டி

சென்னை: எந்த கட்சியை பார்த்தும் அதிமுக பயப்படாது என அமைச்சர் பெஞ்சமின் கூறினார். பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சி, அம்மன் நகர் பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்சமின், க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்கள். பின்னர் காட்டுப்பாக்கம், கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எந்த கட்சியை பார்த்தும் அதிமுக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை போல் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டி உள்ளார். காட்டுப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு பணிகள் நடந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பலராமன், ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு,  கே.எஸ்.ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுதமன், வைதியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Benjamin Interview ,party , AIADMK, Minister Benjamin
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...