சென்னை : பேருந்துகள், ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி