×

சத்தீஸ்கரில் துப்பாக்கி சண்டை...10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சண்டையில் 10 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இன்று பாய்ராம்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 10 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் சடலம் மீட்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்த 11 ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, பிஜாப்பூர் மாவட்ட எஸ்.பி. மோகித் கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh ,gun firing ,Naxalites ,Security forces , Chhattisgarh,gun firing,Naxalites,shot dead,Security forces,action
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...