×

தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகும் நிலையில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரும் மசோதாவுக்கு மோடி ஒப்புதல் தருவாரா?: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜவுடன் கூட்டணி வைக்க தயாராகிக்  கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரும்  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை கூட்டணிக்கான நிபந்தனையாக  முன்வைத்து, மத்திய பாஜ அரசை வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியிருப்ப தாவது:தமிழ்நாடு இளைஞர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பாழாகி வருவதற்கு தி. மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  மருத்துவக் கல்வி மற்றும் முதுநிலை மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்ப டையில் மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாதது. ஒவ்வொரு வருடமும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் என்று காத்திருந்து காத்தி ருந்து கண்கள் பூத்துப் போன மாணவர்கள் மருத்துவராகும் கனவும் சிதைந்து இன்று கிராம மக்களின் சுகாதார தேவைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி 18.2.2017ல் மாநில ஆளுநரால் அனுப்பி வைக்க ப்பட்ட அந்த இரு மசோதாக்களின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கே அனுப்பப்படாமல் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அந்த மசோதாக்களை மத்திய பா.ஜ.க. அரசு குப்பைத் தொட் டியில் வீசி அவமானப்படுத்தியிருக்கிறது.

நீட் தேர்வால் 2017 - 18ல் மருத்துவ வகுப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்து விட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 2 முதல் 21 வரை மட்டுமே இருந்தது. ஆனால் 2017-18ல் இந்த எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.  அரசு பள்ளிகளில் படித்தாலும், தனியார் பள்ளிகளில் படித்தாலும் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு என்ற கொடூர அரக்கன் கொன்று புதைத்திருக்கிறது.கடந்த கால முடிவுகளை அலசிப் பார்த்தால், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அனிதா உள்ளிட்ட பல மாணவியர், பெற் றோர்கள் தங்கள் உயிரைப் பறி கொடுத்தும், நீட் தேர்வுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்க வக்கில்லாத மத்திய பா.ஜ.க. அரசோ, அதற்கு அடிமையாக இருக்கும் அ.தி. மு.க அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமப்புற மக்களைக் காப்பாற்றுவதற்குக் கூட மருத்துவர்கள் இல்லாத பேரபாயம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமை ப்பு ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழும் மிகப்பெரிய ஆபத்தை நீட் தேர்வு ஏற்படுத்தி யுள்ளது. ஆகவே தேர்தல் காலத்தில் சுய ஆதாயத்திற்காக எத்தனையோ அறிவிப்புகளை வெளியி டும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மாணவர்கள் நலன் கருதி, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற வேண்டும். அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தயாராகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப் போதாவது நீட் மசோதாக்களுக்கு ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பதை கூட்டணிக் கான நிபந்தனையாக முன்வைத்து, மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,withdrawal ,alliance ,examination ,NEAT ,BJP ,Chief Minister ,MK Stalin ,election , Will Modi, demanding ,EAT examina,in the election ?: MK Stalin's question to the Chief Minister
× RELATED உண்மையைச் சொன்னதால் இந்தியா கூட்டணி...