சென்னை: தூத்துக்குடி சந்தியா உடலை போலீசார் அடையாற்றில் தேடி வருகின்றனர். சந்தியா கணவரை அழைத்து சென்று அடையாற்றில் தீவிரமாக தேடி வருகின்றனர். உடலை வீசிய இடத்தை போலீசிடம் பாலகிருஷ்ணன் காண்பித்து வருகிறார். ஏற்கனவே கை, கால்கள் மீட்கப்பட்ட நிலையில் சந்தியா தொடைப் பகுதி அடையாற்றில் மீட்கப்பட்டுள்ளது. சந்தியா உடலை 7 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசியதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி