சென்னை: வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்களை பாதுகாக்க, ‘தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் பாதுகாப்பு சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து வன்னியர்குல பொது அறக்கட்டளையை நிர்வகிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:வன்னியர்குல சத்திரியர் பொது அறக்கட்டளை பாதுகாப்பு குழு தலைவராக ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்அதிகாரி), உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாஜலம் (சேலம், மேற்கு தொகுதி), கே.ஏ.பாண்டியன் (சிதம்பரம் தொகுதி) மற்றும் தியாகராஜன் (ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியாளர் - மின்வாரியம்), உறுப்பினர் செயலராக டாக்டர் பிருந்தா தேவி (சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலை நில ஆர்ஜிதம், விழுப்புரம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த பதவியில் 3 ஆண்டுகள் தொடர்வார்கள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி